Tuesday 23 August 2011

வேள்விகளாய் கேள்விகள்

கொட்டும் அருவியிடம்
பட்டென்று ஓர்கேள்வி
கேட்டேன் "ஏனிப்படி
ஓயாமல் விழுந்தோடி
கொண்டிருக்கிறாய் ! "
பட்டும்படாமலும் பதில்
வந்தது
"ஓ மனிதனே! நீங்கள்தாம்
பலனை எதிர்பார்த்து
பணிகள் செய்வீர்கள்
எங்கள் நீர்வீழ்ச்சி
தங்கள் மன மகிழ்ச்சி"
என்றது நல்லருவி.

தாமரையிடம் கேட்டேன்
தரமான ஓர் கேள்வி
"தாங்களை ஆதவன்
தழுவியதும் மலர்வது
எதற்காக ? "
தாமதமின்றி உடனே
தாமரை நவின்றது
"மட்டற்ற மகிழ்ச்சியில்
மலர்கிறேன் மணத்துடன்
காரணமின்றி காரியமாற்றும்
உதாரணம் யான் "


"ரோசாப்பூவே முள்ளுடன்
மலர்வது எதற்காக என்றேன் ?"
"உனது மனது போன்றவள் 
யான் துன்பமுட்கள்
துளைக்கும் போதும் இன்பத்தில்
திளைக்க இன்ப இதழ்கள்
தளைத்து விரிந்து பரிவுடன்
வருடுதல் போல் மலர்கிறேன்"
என்றது ரோசாப்பூ கனிவுடன்.

மேகத்திடம் ஞான
தாகத்துடன் கேட்டேன்
"நீவீர் நீரைப் பொழிவது
எதற்காக ? "
"முன்பு முற்போகம் விளைய
முழுமையாய் உயிர்கள் எலாம்
இன்புற்றிருக்க உள்ளத்தின்
கருணையில் காரணமின்றி
கண்ணீர் வருவது போல்
தண்ணீர் மழை பொழிந்தேன்
இன்றோ இயற்கையை
சுரண்டி பூமியன்னையை
தோண்டி மணல்குழந்தைகளை
விற்கும் கெட்ட மனிதர்களை
எண்ணி உள்ளம் குமுற
புயல் மழையாய் கொட்டுகிறேன் "
என்றது மேகங்கள்.

இப்படி யான் பல கேள்விகளை
இயற்கையிடம் கேட்க அதுவும்
பதில்களை அளிக்க கேள்விகளின்
ஆழமோ அதிகரிக்க பதில்கள் தாம்
மௌனக்கடலில் மூழ்கியது.



No comments:

Post a Comment