மோகத்தை கொன்று
தேகத்தை வென்ற
வேகத்தில் நான்
மேகத்தை பார்த்தேன்
மேகம் சொன்னது
"ஓ மனிதனே
உனது தேகமும்
என்னைபோன்றது
கடலிலிருந்து
நீராவியாய் எழுந்து
மேகமானேன்
மலைகளையும்
பள்ளத்தாக்குகளையும்
கடந்து தென்றல்
தழுவியதும் மீண்டும்
மழையாய் மாறி
கடலில் கலக்கிறேன்
நீயும் இவ்வுலகில்
பரமாத்மாவிடம்
இருந்து தேகத்தில்
ஆவியாய் இணைந்து
இன்ப துன்பங்கள்
வெற்றிதோல்விகள்
ஆகிய மலைகளையும்
பள்ளத்தாக்குகளையும்
கடந்து மரணத்தை
தழுவியதும்
ஆன்மா கடவுளை
மீண்டும் அடைகிறது"
மனது சாந்தமானது
மனது சாந்தமானது
உலகில் உள்ள
உயிர்கள் உள்ளே
உறைந்திருப்பது
பரம்பொருளே!