Friday 12 July 2013

செந்தமிழ்தேன்மொழியாள்(ல்)

உனது அங்கங்கள் அழகிய
தமிழ் சங்கங்கள்
உயிரெழுத்து தமிழுக்கு உன்
உயிரால் எழுது எந்தனக்கு
மெய்யெழுத்து மென்மைக்கு உன்
மெய்யால் எழுது ஆண்மைக்கு
உயிர்மெய் கலந்ததால் உதிக்கும்
உன்னத எழுத்துக்கள் - நம்
உயிர்மெய் கலந்ததை
பிரபஞ்சத்தில் எழுதுங்கள்
என்றுரைத்தாய் அழுத்தமாய்
ஆய்த எழுத்து செவ்வாயால்
ஆய்ந்து எழுதியும் என் மார்பில்
காயங்கள் ஏற்படாத மாயங்கள்
தான் என்னவோ ?!

கொற்றவனை கொஞ்சுமுன்
மொழியால் உனக்கு
உற்றவனாக்கி நிறைய
கற்றவனென்ற மமதையை
அழித்து ஆணவம் ஏதும்
அற்றவனாக்கி விட்டாய்
பற்றற்று இருக்க துணிந்தவனை
அனைத்தையும் பெற்றவனாக்கி
விட்டாய் !