உலகெனும் நாடக மேடையில் ஆடி
களைத்து சோர்ந்த போன என்னை
களங்கமில்லா என்னவளே உன்
மடியில் கண்ணுறங்க செய்தாய்
கதகதப்பாய் உன் உள்ளங்கை
வெப்பம் என் கைகளில் பரவி
நாணும் உன் அழகு கண்கள் -வழி
வெளிப்படும் காதல் கனலாய்
இதழ்கள் இரண்டையும் ஒன்றாக்கி
இதயத்தை ராகங்களின் ஊற்றாக்கி
மூளை மடிப்புகளில் பாய்ந்தோட
என் முகத்திற்கு பொலிவு தந்தாய்
தோல்வியில் தலைகுனியும் போது
தோள்களை தந்தாய் தலைசாய்க்க
வருந்தும் மனதிற்கு மருந்தாய்
இருந்து துவளாமல் தடுத்தாய்
இத்தனையும் செய்துவிட்டு இனியவளே
பித்தனைப்போல் எனை புலம்பவைத்து
இத்தனை காலங்கள் எங்குசென்றாயோ ?
என்று காண்பேனோ உன்னை யான் ?
களைத்து சோர்ந்த போன என்னை
களங்கமில்லா என்னவளே உன்
மடியில் கண்ணுறங்க செய்தாய்
கதகதப்பாய் உன் உள்ளங்கை
வெப்பம் என் கைகளில் பரவி
நாணும் உன் அழகு கண்கள் -வழி
வெளிப்படும் காதல் கனலாய்
இதழ்கள் இரண்டையும் ஒன்றாக்கி
இதயத்தை ராகங்களின் ஊற்றாக்கி
மூளை மடிப்புகளில் பாய்ந்தோட
என் முகத்திற்கு பொலிவு தந்தாய்
தோல்வியில் தலைகுனியும் போது
தோள்களை தந்தாய் தலைசாய்க்க
வருந்தும் மனதிற்கு மருந்தாய்
இருந்து துவளாமல் தடுத்தாய்
இத்தனையும் செய்துவிட்டு இனியவளே
பித்தனைப்போல் எனை புலம்பவைத்து
இத்தனை காலங்கள் எங்குசென்றாயோ ?
என்று காண்பேனோ உன்னை யான் ?