Saturday, 13 August 2011

கவிதை எழுத முயற்சி

செந்தமிழில் எளிமையாய் கவிதை
எனக்கு எழுத தெரியாது
சந்தத்துடன் நயனமாய்
பாடல் இயற்ற தெரியாது
எனினும் தமிழ்
சொந்தங்கள் பெருமையாய் மனதில்
எனது கவிதையை அவர்கள்
பந்தங்களுடன் பொறுமையாய்
படித்திட வேண்டும் என்றும்

பைந்தமிழில் பாங்குடன்
பாக்கள் பலநூறுவடித்திட
பைம்பொழிலில் தருவின் நிழலில்
பூக்கள் எனை வருடிட பையவே
எனைசூழ்ந்த தருணங்களின் சாயல்மிக நெருடிட
எண்ணச்சுழலில் எழுந்து
கண்ணீராய் பொழிந்தது கவிதை

விடாது வார்த்தைகளை துரத்திட
கண்களிரண்டும் வலித்திட
மூடா இமைகள் விரல்களிடம்
"ஏதாவது எழுதுஎன" துடித்திட
படாத பாடு பட்டு மூளையின்
ஆணைக் கிணங்க வெடித்து
சடாரென்று உதித்தது
ஆதவனாய் கவிதை என்னில்

ஒளிந்து கிடக்குது கவிதைகள்
பற்பல பிரபஞ்சத்தில்- மனம்
தெளிந்து கிடைக்குது எண்ணங்கள்
கவிதை இயற்றிட நலிந்து
கிடந்த யான் தாமரையாய்
மலர்ந்து கவித்தேன் வழிந்து
ஓடுகிறது எனது
இதயகமலத்திருந்து ஆறாய்




No comments:

Post a Comment