Tuesday 16 August 2011

கவிஞர்கள்

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிப்பாடும்
ஏழை வீட்டு அடுப்புக்கரியும் கவிப்பாடுவேன்
சிறுவன் யான் தவறிருந்தால் மன்னியுங்கள்
தருவேன் நல்ல கவிதையாய் நம்புங்கள்

கார்மேகமாய் கவிதை மழை பொழிய
கனிவுடனே அதில் அடியேன் நனைய
கால்களும் அழகு சந்ததிற்கு நடம்புரிய
கலந்தேன் கருத்தில் எண்ணங்கள் தெளிய

வானத்திற்கு ஒப்பாக கவி வடிக்கும்
கவிவாணர்காள் மயக்கும் தங்கள்
வார்த்தை வீச்சும் செந்தமிழ் பேச்சும்
வாடிய பயிரையும் உயிர்பிக்கும் மூச்சு

கவிப்பாடும் திறன் எங்கிருந்து வந்தது
கவிஞர்களின் ஊன் உயிரிலும் கலந்தது
கவிப்பாடி நான் எழுத்துவதற்கு சிறந்த
எழுதுகோல் தருக தொழுது கவியெழுத

No comments:

Post a Comment