Wednesday 25 January 2012

காதலியே ....

என்ன பிடிக்கும் என்னவளே
உனக்கு என்ன பிடிக்கும்
என்னைத்தவிர எல்லாம்
பிடிக்கும் உனக்கெல்லாம்  பிடிக்கும்

எப்படி வெளிப்படுத்த என் காதலை
எப்படி வெளிப்படுத்தி  சொன்னாலும்
புரிவதில்லை உனக்கு கண்ணீர்தான்
சொரிகிறாய் உயிரே  எந்நாளும்

வெட்கத்தை விட்டு கெஞ்சினேன்
நாணத்தை விட்டுவிட மிஞ்சுகிறாய் - என்
ஆணவம் உன்னிடம் உடைந்தது
ஆனாலும் உன் மனம் இளகவில்லையே 

இருண்டது  என் கண்கள் உன்னை
காணாமல் கண்டதும் பேச இயலாமல்
வறண்டது என் நாவு காதல் மழையின்றி
மருண்டது என் மனம் ஆசைகொண்டே

நாலுபேர் பேசுவதை எண்ணி
நாணும் நங்கையே நாளும் உன்
துயர் துடைக்க நாட்டவர் யாரும் 
வரமாட்டார் அடைக்கலம் நானே

காதலில் மட்டும் தோல்விதான்
காலம் முழுதும் இன்பசுமையாய்
காலனிடமிருந்து அழைப்புவரும் வரை
கணத்து கொண்டிருக்கும் எந்நாளும்......

என் காதலை ஏற்க மறுத்த
சூழ்நிலை கை(ர )தியே உனை
சூழும் துன்பத்தை துடைப்பேன்
சூழ்ச்சியில் சிக்க விடமாட்டேன்