Saturday 25 August 2012

வானவில்நிகழ்வுகள்

வானவில்லாய் தோன்றி
மறைந்தது நிகழ்வுகள்
பல என்  வாழ்விலே
பிறப்பெனும் வாசல்
நுழைந்து ஒருவழிப்
பாதையில் பயணம்
செய்து எதிர்வரும்
எதிர்பாரா இன்பதுன்ப
விபத்துக்களை எதிர்கொண்டு
பணி  செய்து பிணிமூப்பெய்தி
நட்பெனும் நதியில் நீராடி
காதலெனும் கடலில் மூழ்கி
மடல்கள் பல அனுப்பி
பகையெனும்  புகையில்
திணறி  நன்றியில்லா
துரோகங்களில் துவண்டு
கோரங்கள் பலகண்டு
பாரமான நெஞ்சுடன்
வாழ்கை பயணம்
வாட்டி  எடுத்தாலும்
வாழ்கிறேன் உலகில்
வாழ்வியலின் அர்த்தத்தைத்
தேடி ...............,