Sunday 21 August 2011

வாழ்க்கை

வாழ்க்கை என்ன பெரிய மந்திரமோ ?
வளவளவென்று அர்த்தங்கள் புரிய வில்லை

வாழ்க்கை என்ன ராஜதந்திரமோ?
வளமுடன் வாழ்வது நரிகள் மட்டும் தானோ?

வாழ்க்கை என்ன எந்திரமோ ?
வழக்கமாய் செய்வதையே திரும்ப செய்யவதால்?

வாழ்க்கை என்ன பெருங்கனவோ ?
கனவிலும் கனவு காண்கிறோம் என்பதனால்

வாழ்க்கை என்ன பெருங்காயமோ?
காயம் அழிந்தாலும் எண்ணமாயமாய் மணக்குமோ?

வாழ்க்கை என்ன பெருக்களோ?
வான்வரை நமது மக்கள் தொகை பெருகுவதால்!
  

1 comment: