Sunday 14 August 2011

திருமணம்

திருமணம் ஒரு
பெருஞ்சிறை என்ற
தெளிந்தோர் வாக்கு 
உண்மையென்று யான்
உணர்ந்திட்டேன் இன்று

"சுதந்திரம் பறி
நிரந்தரமாய்" இது
இன்றுலகில் எல்லா
திருமணத்தின் சிறை
மந்திரம் காணீர் !

ஆயுட்தண்டனை இது
ஆனந்தத்தை கெட்ட
ஆணவத்தால் உடன்
அழித்துவிடும் நம்மை
முடக்கி விடும் கண்டீர் !

குறியொன்றும் இல்லாது
குறிப்பறிந்து உதவாமல்
குதூகலத்தை போக்கி
கூனி குறுகிட செய்யும்
குதர்க்கமாய் திருமணம்


No comments:

Post a Comment