Monday 5 September 2011

ஆணவம்

ஆணவம் என்பது ஆமையை போன்றது கண்டீர்
ஆதாயம் பிறர்க்கு செய்யும் போதும் மெல்ல
ஆழமாய் நுழைந்து விடும் தழைத்து விடும்
ஆற்றொன்னா நோயாய் மனதில் பதிந்து விடும்
சேவைகள் பல மக்களுக்கு செய்வேனென்று பலர்
தேவைகள்தான் அறியாது வீண் வெகுமதிகள் கொடுத்து
நாவை அடக்காது நால்வித கருத்துக்களை நவின்று
சாவைத்தான் அடைவார்கள் கடைசியில் வெறுத்து
புண்ணியங்கள் செய்கிறோம் என்ற நினைப்பினில்
புளகாங்கிதத்துடன் ஆணவமெனும் போதையில்
புரியாமல் தீயவர்களை தழைக்க வைக்கிறார்கள்
புன்செயல்கள் புரிபவர்களை பிழைக்க செய்கிறார்கள்


No comments:

Post a Comment