Wednesday 9 April 2014

விடியல்

அதிகாலை வேளையிலே இருள் சூழ்ந்திருக்க 
மதியும் வெள்ளியும் விடுமுறைக்கு சென்றிருக்க 

பொதியும் கால்கள் மணலிலே திணறிட    - என் 

மதியும் சோர்வுற்று உறங்கிடும் வேளையிலே 

நதியருகே மின்னலென மின்மினிகள் கண்டதும் 

உதித்திடும் ஆதவன் கிழக்கே சற்றுநேரத்தில் (என்றே) 

உதித்தது நம்பிக்கைகதிர்கள் என்னுள்ளே -அதனை

விதைத்தது மின்மினியின் சிறு ஒளி அன்றோ !