Wednesday 30 November 2011

கடவுளும் வரங்களும்

அகண்ட பேரண்டமே எனது வீடு
நட்சத்திர கூட்டங்கள் நண்பர்கள்
நிலவிலும் உள்ளது விலாசம்
பிரபஞ்சமே நீ பூமித்தாய் மீது
விண்கற்களை எறிந்தாலும்
சபிக்கமாட்டாள்   உன்னை
அணுக்கழிவுகளால் துளைத்தாலும்
சளைக்காமல் அலையடிக்கும்
கடலண்ணன் என்று இப்படி
பல சொந்தங்கள் எனக்கிருக்க
கடவுள் வந்து என்னிடம்
"வரங்கள் என்ன வேண்டும்"
என்று பரிவுடன் கேட்க
"மரங்கள் போன்ற பல
வரங்கள் உள்ளன எங்களிடம்
வாருங்கள் நீங்களும் பூமிக்கு
வருகை புரிந்து தாங்கள்
வருடங்கள் பல ஆகின்றனவே "
என்று நான் வினவினேன்
"அவதாரங்கள் பல எடுத்தேன்
அயோக்கியர்கள் சில பேரை
அழிக்க இன்றோ நல்லவர்கள்
சில பேரை காப்பாற்ற
பெரிய அவதாரங்கள் பல
எடுத்தும் முடியவில்லை
முற்றுபெறவில்லை முடிவில்லா
துன்பங்கள் வாழ்வில்"


No comments:

Post a Comment