Thursday 3 November 2011

பிள்ளைபிராயத்து காதல்

முல்லை அரும்பான
பிள்ளை பருவம்
கடந்து அவன்
அரும்பு மீசையும்
குறும்பு பார்வையும்
கரும்பின் சுவையான
கற்கண்டு பேச்சும்
பனித்துளியாய் முகம்
முழுதும் பருவத்தில்
வளரூக்கி விதைத்த
பருக்களும்
அவை முழுவதும்
நீங்கி முகம்தான்
வளவளவென்று
வாளிப்பாக மாற
ஏங்கி கண்ணாடி
முன்னே வெகுநேரம்
கடுந்தவம் புரிந்து
கடலைமாவும்
கட்டித்தையிரும்
கலந்து முகத்தில்
தேய்த்து கொள்வான்

சிகையலங்காரத்தை
சினிமா நட்சத்திரங்கள்
போல் பலவாறு
மாற்றி சிலிர்த்து
கொள்வான்
பெற்றோரை
எதிரியாய் பார்ப்பான்
நண்பர்கள் கடவுளாய்
தெரிவார்கள்

நங்கையின் கடைக்கண்
பார்வைக்கு எங்கும்
மனது காலநேரம்
தெரியாமல் தறிகெட்டு
ஓடும் பரிபோல்
தன்னை கதாநாயகனாய்
காட்ட கதைகட்டுரை
ஓவியம் கவிதை
பாடல் ஆடலென
திறமைகளை
பாவையர் முன்னே
வெளிப்படுத்தி
வெட்கத்துடன்
அவர்களின்
பாரட்டிற்கு
பரிதவிப்பான்

உலகமே
உன்னதமாய்
தோன்றும் வயது
ஆதாயம் பாராமல்
அனைவரிடமும்
அன்பு செலுத்துவான்

இவன் பிற்காலத்தில்
சாதனை புரிவான்
சொத்துக்கள் பல
சேர்ப்பான் பணத்தை
சம்பாதித்து குவிப்பான்
போன்ற எதிர்பார்ப்பு
இல்லாமல் இவனையும்
இளநங்கை ஒருத்தி
இதயத்தில் இருத்தி
காதல் புரிந்தாள்
வெள்ளை மனது
வெளிப்படுத்த
முடியவில்லை
பொருளாதார
நெருக்கடியில்
பாவம் அந்த
நடுத்தரக்
குடும்பத்தின்
பையன் மேலும்
படித்து உழைத்து
முன்னேற சென்றான்
அவளின் காதலை
புரிந்த கொண்ட
பொழுது அவளும்
இந்த உலகின்
சந்தர்ப்ப காதலில்
சிக்கி திருமணம்
செய்து கொண்டாள்
எல்லாம் சாதித்த
அவனின் மனது
ஏதோ ஒன்றிற்கு
ஏங்கி தவிக்குது
எதிர்பார்ப்பில்லா
அந்த தூய அன்பிற்கு ......




1 comment:

  1. This is 100% a classical sign of adolescent turmoil,you nicely revealed it
    பெற்றோரை
    எதிரியாய் பார்ப்பான்
    நண்பர்கள் கடவுளாய்
    தெரிவார்கள்

    ReplyDelete