சம்மட்டியால் மிகவும் வேகமாக
நம்மை நாமே தாக்கிகொள்கிறோம்
சம்மங்கிபூவாய் இருந்த மனதில்
மாறாத தழும்புகளாய் பிரச்சனைகள்
சமரசம் செய்து பழியை நேர்த்தியாய்
பிறர் மேல் தூக்கி போடுகின்றோம்
சமமாய் இருந்த மனம் தனில்
பள்ளத்தாக்குகள் பல ஏற்படுத்திவிட்டோம்
வாழ்க்கையின் தொடரும் சோதனைகளால்
வழிமாறி செல்லும் நாம்
வாழைமரத்தின் தியாகத்தை
போற்றி புகழ வேண்டும் மனதால்
வாகை சூடி வெற்றி பெற முடியாததற்கு
பிறர் மேல் குறை கூறி நாம்
வாய்சொல்லில் வீரன் என்ற
பட்டதை வாங்க வேண்டாம்
நம்மையே பிரதிபலிக்கும் கண்ணாடி
இவ்வாழ்க்கை அதனால்
நன்மையே பிறர்க்குசெய்து
நல்லதையே பார்ப்போம் எந்நாளும்
நன்றி எதிர்பாராது குறிப்பறிந்து
நல்லவை பிறர்க்கு செய்து
நலமுடன் வாழ நாளும்
சங்கல்பம் செய்வோம் சாதிப்போம்
Nice
ReplyDeletenanri
ReplyDelete