Tuesday 1 November 2011

தீதும் நன்றும் பிறர்தர வாரா

சம்மட்டியால் மிகவும் வேகமாக
நம்மை நாமே தாக்கிகொள்கிறோம்
சம்மங்கிபூவாய் இருந்த மனதில்
மாறாத தழும்புகளாய் பிரச்சனைகள்

சமரசம் செய்து பழியை நேர்த்தியாய்
பிறர் மேல் தூக்கி போடுகின்றோம்
சமமாய் இருந்த மனம் தனில்
பள்ளத்தாக்குகள் பல ஏற்படுத்திவிட்டோம்

வாழ்க்கையின் தொடரும் சோதனைகளால்
வழிமாறி செல்லும் நாம்
வாழைமரத்தின் தியாகத்தை
போற்றி புகழ வேண்டும் மனதால்
  
வாகை சூடி வெற்றி பெற முடியாததற்கு
பிறர் மேல் குறை கூறி நாம்
வாய்சொல்லில் வீரன் என்ற
பட்டதை வாங்க வேண்டாம்

நம்மையே பிரதிபலிக்கும் கண்ணாடி
இவ்வாழ்க்கை அதனால்
நன்மையே பிறர்க்குசெய்து
நல்லதையே பார்ப்போம் எந்நாளும்

நன்றி எதிர்பாராது குறிப்பறிந்து
நல்லவை பிறர்க்கு செய்து
நலமுடன் வாழ நாளும்
சங்கல்பம் செய்வோம் சாதிப்போம்


   

2 comments: