Tuesday 23 October 2012

தேவதையின் அரவணைப்பு

தேவதை ஒருத்தி
தேன் உதடுகளால்
என் கண்ணீரில்
முத்தமிட அது
சத்தமில்லாமல்
தத்தம் கண்களுக்கு
திரும்பியது.
அவளின் இமைகள்
மயிலிறகாய்  மாறி
முகம்தனை வருட
வெண்பனி பட்டது
போல் சிலிர்ப்பு .
அவள் தலைசாய்த்ததும்
தோகை முளைத்தது
என் தோள்களுக்கு.
என்னை நேசமாய்
தழுவிய பொழுது
தழுதழுத்தது என்
குரல், அதிர்ந்தது
தேகம், உதிர்ந்தது
ஆனந்த கண்ணீர்
புரிந்தது எனக்கு
அவளது நேசம்

No comments:

Post a Comment