Monday 15 October 2012

தேடல்கள்

தேடியது எதை
என்பதை எண்ணி
எண்ணி நித்தம்
வாடியது மனது
விடைகாணமல்?
உன்னை நான்
நாடியது நங்கையே
தேடலின் விடை
காணவே எனக்கு
கூடியது காதலும்
காமமும் ஆனால்
நான் தேடியது
இதுவல்லவே
மூடியது கண்கள்
மூண்டது கனல்
என்னுள் எண்ணங்கள்
மாண்டது பரசிவ
வெள்ளத்தில் ஆன்மா
மூழ்கியது ............... 

No comments:

Post a Comment