Sunday 6 January 2013

சாக்காடு

சாவும் சாத்தானும் சரிசமமோ ?
இரண்டையும் 
விரும்புவோர் இல்லை 
உலகத்தில் எனினும் 
ஆட்கொள்ளப்படுவோம் 

இறப்பும் இறைவனும் 
இணையகுமோ ?
இரண்டையும் கண்டவர் 
மீண்டு வந்து சாட்சி 
சொன்னதும் உண்டோ ?

பணியாளனாகிய தனது 
பிணியானைப் பணித்து 
தணியாத அதனின் 
தாகத்தை தீர்த்து 
தனிமையை உணர்த்தும் !

மூப்பெனும் மணியோசை 
முன்பே ஒலிக்க செய்து 
முதுமையில் மூழ்கடித்து 
முன்னறிவிப்பாய் எங்களுக்கு 
உனது வருகையை 

உள்ளத்தில் வேதனையோடும் 
உருகும் உணர்வுகளோடும் 
உனை நாடி வருபவர்களை 
உவகையுடன் வரவேற்று 
உயிர் போக செய்வாய் 

பஞ்சபூதங்களின் துணையோடு 
பிஞ்சுகளையும் வஞ்சகரையும் 
நெஞ்சுரம் கொண்டவரையும் 
மஞ்சத்தில் துயில்பவரையும் 
பேதங்களின்றி கணத்தில் முடிப்பாய் 

பணத்திற்கு மயங்குவதில்லை 
அழகை ஆராதிப்பதில்லை 
பதவிக்கு பணிவதில்லை - என்றும் 
சமத்துவம் காக்கும் கம்பீரம் 
கார்ல்மார்க்ஸ் கண்ட கம்யூனிசம் 
உள்ளது உன்னிடம் மட்டுமே ...


No comments:

Post a Comment