Monday 15 October 2012

சகிப்புத்தன்மை

போற்றுதற்குரிய பெரியவரே
பொறுமையின்றி இளைஞரின்
கூற்றுதனக்கு சிறிதும் செவி
சாய்க்காமல் அவர்களை
தூற்றுவதற்கு துணைபோகிறார்
சேற்றைவாரி இரைத்தல்போல
பொல்லாங்கு நித்தம் பேசி
நாற்றமடிக்கும் வாயை
வாயார புகழ்ந்திடுவார்
மாற்றுவதற்கு முயன்றேன்
தோற்றுபோனேன் அடிப்படை
குணங்களை மாற்ற இயலாது
கண்கள் குளமாயின நீர்
ஊற்று பொங்கி வழிய (எனை)
தேற்றுவதற்கு எவருமுண்டோ ?

No comments:

Post a Comment