Wednesday 25 December 2013

வஞ்சியெனை வஞ்சியாதே

பஞ்சணையை  வெறுத்து உன் 

நெஞ்சணையை  நினைத்து 

அஞ்சனம்   இளைத்து 

கொஞ்செனை என மொழிந்து நின்ற 

வஞ்சிஎனை கஞ்சி(கருமி)  என்றாய் 

அஞ்சிநின்றவளை கொஞ்சினேன் உனை என்றாய்

விஞ்சி நின்ற அன்பினில் வஞ்சியும் உன்

கெஞ்சு மொழி உணர்ந்து

தஞ்செமென சாய்ந்தாள் 

துஞ்சிட தோள் தருவாய் 

பஞ்சென இவள் துயர் பறக்க...,


No comments:

Post a Comment