Tuesday 10 April 2012

ஞானத்தை தேடி

மனமே நீ எங்கு இருக்கிறாய்
தங்கு தடையின்றி எண்ணங்கள்
உன்னில் உதித்து அலைஅலையாய்
வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது

எண்ணங்களே உங்களிலும்
பிரிவினை நல்லவையாம்
கெட்டவையாம் இவ்விரண்டையும்
எங்கனம் பிரித்து கொள்வது

கெட்ட எண்ணங்கள் என்று
சட்டம் பேசுபவர்களே அவை
எங்கிருந்து தான் தோன்றுகின்றன ?
தோண்டி பார்த்தேன் அதற்கு
பதில் ஏதுமில்லை  !

சூன்ய நிலை சமாதி நிலை
என்றே கூறுகிறார்கள்
எண்ணங்களற்ற நிலை
என்றும் பகர்கிறார்கள்
கண்களை மூடினால்
என்முன்னே பாய்கிறது
எண்ணங்கள் அலையாய் !

தவங்கள் பல புரிந்தேன்
யோகங்கள் தினமும்
மேற்கொண்டேன்
ஞானம் அடைய
எதுதான் வழி
ஞாலத்தில் நானும்
தேடி அலைகிறேன்.......

No comments:

Post a Comment