Wednesday, 14 March 2012

மனதில் அவள்

நெருஞ்சி முள்ளாய் இருந்த-மனதில்
குறிஞ்சி மலராய்
மலர்ந்து மணம் வீசுகிறாய் தினம்
கதை பேசுகிறாய்

குருட்டாயிருந்த என்மனதில்
வருடுமுன் நல்அன்பினில்
வருத்தம் நீக்கினாய் சடுதியில்
வருடகணக்கில் உன் அன்பில்
கட்டுண்டு கிடப்பேன் நான் .............

கெஞ்சும் என் கண்களை
கொஞ்சும் உன் கண்களால்
தஞ்சம் அடைய செய்கிறாய்
நெஞ்சம் முழுதும் காதலால்
மஞ்சத்தில் தூக்கமின்றி
தவிக்கவைக்கிறாய்.......


No comments:

Post a Comment