Friday, 13 April 2012

என்ன செய்ய போகிறாய்

உண்மை என்பது
துளியளவும்
உன் பேச்சிலில்லை
என்னவளே
உடைந்தே விட்டேன்

நன்மை செய்தே(னே) ன்
நாள்தோறும்
நம்பாமல் விட்டுவிட்டாய்
வாழ்க்கையெனும்
நட்டாற்றில் தன்னை

"என் பெண்மை
உனக்குமட்டும்
தான்" என்றுரைத்தாய்
ஆனளவும்  ஏமாற்றமே 
பரிசாய் தந்தாய்

வன்மையாய் நடந்த
வஞ்சகர்க்கும்
நன்மையே செய்தாய்
மன்னித்தாய்
துரோகங்களை

உன்தன்மையை
புரிந்து கொள்ள
முடியவில்லை
துன்பத்தில் உழலும்
என்னால்.............


No comments:

Post a Comment