Thursday 15 December 2011

மை

பொதி சுமப்பது கழுதையின் முதற் கடமை
விதியை பழித்து முயலாமலிருப்பது முழு  மடமை
நதியில் எறிந்தும் மூழ்காதது தனி திறமைத்
சதிசெய்தாலென்றும் நேரும்  தீரா பகைமை
காலம் கடந்து மெல்ல வெல்வது வாய்மை
காலனிட மிருந்து நம்மை  காப்பது தூய்மை
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சாவது தாய்மை
உயிர்களெல்லாம் வணங்கும் பராசக்தி பெண்மை
உயிர்த்துடிப்பாய் இருக்கும் விழிப்புணர்வே ஆண்மை
இவ்விருவரும் இணைதேயிருந்தால் இனிமை
தனிமனித சுதந்திரம் இருவருக்கும் சம உரிமை
அனைவர்க்கும் ஞானத்தை அளிப்பது தனிமை

No comments:

Post a Comment