சிரித்து மகிழ்ந்து
சிந்தை தெளிந்து
பள்ளி செல்லும்
பாங்கை மறந்து
செல்ல சிறார்கள்
செய்கிறார்கள் பணி
செல்லும் இடமெல்லாம்
கண்கள் குளமாகி
மனது ரணமாகி
இதயம் கணமானது
இதை தடுக்க
சட்டங்கள் போட்டும்
சரிவரவில்லை
திட்டங்கள் போடும்
அரசாங்கம் பிள்ளைகள்
பட்டங்கள் வாங்க
வழி செய்ய வேண்டும்
வறுமை அருகி
வளங்கள் பெருகி
நலங்கள் பெற்று
நாளும் பிள்ளைகள்
பள்ளிகள் சென்று
பாங்குடன் படித்திட
பங்காற்றுவோம்
பணிவன்புடன்
No comments:
Post a Comment