Monday 17 October 2011

பாரதி

கடையத்தில் கண்டேன்
பாரதி வாழ்ந்த வீட்டை
தடையேதும் இல்லாது
கவிதை மழை பொழிய
குடையேதும் இல்லாது
மக்கள் அதில் நனைய
சொற்கள் அருவியாய்
என் மனதில் கொட்டிட
கடைக்கோடி அடியேன்
தொழுதேன் கண்ணீர்
மல்க

பாரதியே நீ கவிதைகளை
காகிதத்தில் எழுதவில்லை
அன்பெனும் எழுதுகோலால்
அறிவெனும் மைகொண்டு
அண்டசராசரங்களில்
பதித்திருகிறாய் அதனால்
காலத்தையும் கடந்து
இளமையாய் ஒளிர்கிறது
உனது படைப்புகள்

No comments:

Post a Comment