தன்முனைப்பை தவிர்க்க முடியவில்லை தவிக்கிறேன்
ஆணவத்தை அடக்க முடியவில்லை ஆண்டாண்டுகாலமாய்
எளிமையான எழையிடமும் ஒளிந்துகொண்டிருக்கிறாய்
வளமையான செல்வர்களிடம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்
பழமையான முதியோருடன் பகட்டாய் பதிந்திருக்கிறாய்
இளமையான சிறார்களிடம் சிரித்து கொண்டிருக்கிறாய்
ஆட்சியாளரின் தலைதனில் தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
மெய்சாட்சியாய் மனம்தனில் திகழந்து சாதனைகளை
பொய்காட்சியாய் எண்ணத்திரையில் வரைந்து சோதிக்கிறாய்
மாட்சிமையான ஞானம்தனை சிதைத்து விடுகிறாய்
No comments:
Post a Comment