Monday 5 September 2011

தன்முனைப்பு

தன்முனைப்பை தவிர்க்க முடியவில்லை தவிக்கிறேன்
ஆணவத்தை அடக்க முடியவில்லை ஆண்டாண்டுகாலமாய்
எளிமையான எழையிடமும் ஒளிந்துகொண்டிருக்கிறாய்
வளமையான செல்வர்களிடம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்
பழமையான முதியோருடன் பகட்டாய் பதிந்திருக்கிறாய்
இளமையான சிறார்களிடம் சிரித்து கொண்டிருக்கிறாய்
ஆட்சியாளரின் தலைதனில் தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
மெய்சாட்சியாய் மனம்தனில் திகழந்து சாதனைகளை
பொய்காட்சியாய் எண்ணத்திரையில் வரைந்து சோதிக்கிறாய்
மாட்சிமையான ஞானம்தனை சிதைத்து விடுகிறாய்


No comments:

Post a Comment