Wednesday 30 July 2014

பிரிவு

கண்விழித்ததும் கலைந்திடும்
கனவல்ல என் காதல்

கண்ணீராய் கரைந்திடும்
கவலையுமல்ல  என்  காதல்

கண்வழி புகுந்து கருத்து ஒருமித்து
வந்ததல்ல என் காதல்

 காமம் தலைக்கேறி (அதனை) கழிக்க
 கனிந்ததல்ல என் காதல்

நம்மை காலம் சேர்த்தது
இது பிரியும் காலமென்றால்
அதை ஏற்பதும் முறையே!


No comments:

Post a Comment